Menu

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற சபாநாயகம் படிப்பக மாணவர்கள்

யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் (ஐ.இ) தினால் திருகோணமலை மூதூர் கட்டைபறிச்சானில் நடாத்தப்படும் சபாநாயகம் படிப்பகத்ததைச் சேர்ந்த மாணவர்களில் இவ்வாண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 25 மாணவர்கள் மாவட்ட வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சிறப்புச்சித்தி அடைந்துள்ளனர்.

அத்துடன் இவர்களில் ஒருவர் 184 புள்ளிகள் பெற்று மூதூர் வலயத்தில் முதல் இடத்தைப் பெற்றுள்ளார்.

சபாநாயகம் படிப்பகம் நடைபெறும் கட்டைபறிச்சான் விபுலானந்தர் வித்தியாலயம் மூதூர் வலயத்தின் 78 பாடசாலைகளில் முதல் இடத்தையும் பெற்றுள்ளதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றோம்.

இதை போலவே, எமது மகாதேவா படிப்பகத்தின் தண்டுவான் பாடசாலை, முல்லைத்தீவில் இருந்து இருவர் பரீட்சையில் வெட்டு புள்ளிக்கு மேல் எடுத்தும் 70% ஆனோர் அடுத்த தரத்துக்கு சித்தியும் அடைந்துள்ளனர். இந்த பாடசாலை வெகு பின்தங்கிய கிராமத்தில் உள்ளது குறிப்பிடதக்கது.

இந்த இடர்பாடான காலத்திலும் விடாமுயற்ச்சியுடன் செயல்பட்டு பரீட்சையில் சித்தி பெற்ற மாணவ செல்வங்களுக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் இதர உதவிகள் செய்த மற்றும் எல்லோருக்கும் எமது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவிக்கின்றோம்.